நடிகர் கவுதம் கார்த்திக் நடிகைகள் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிக்கும் படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. 'ஹரஹர மஹாதேவகி' புகழ் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் அடல்ட் ஹாரர் காமெடி படமாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் மே 4ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
ADVERTISEMENT
ஒரு பக்கம் படத்தை படுமோசமாக எடுத்துவிட்டு கடைசியில் திடீரென்று ஒரு மெசேஜ் போட்டு மெர்சல் ஆக்குகிறார்கள் என்றால், மறுபக்கம் மெசேஜ் என்பதற்கே அர்த்தமில்லாமல் இப்படியும் செய்கிறார்கள். நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருகி வரும் நிலையில் இதை விளையாட்டாக எடுத்துக்கொள்வதா அல்லது உண்மையில் இவைதான் தீர்வா என்று தலை சுற்றுகிறது. தமிழ் சினிமாவை மெசேஜ் பைத்தியம் விட்டு விலக வேண்டும்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments