மேலும் ‘சாமியே இல்லைனு ஊருக்குள்ள சுத்திட்டு திரிஞ்சியே அந்த ராமசாமி தான நீ’ என்ற வசனம் இடம் பெற்றிருந்த நிலையில் அந்த வசனம் பெரியாரை விமர்சனம் செய்யும் விதமாக அமைந்துள்ளதாக சர்ச்சையானது. சந்தானமும் கடந்த பொங்கலன்று அந்த வசனத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில் அது இன்னும் சர்ச்சையான பிறகு, அந்த பதிவை நீக்கிவிட்டார்.
இப்படம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதையொட்டி நடந்த இசை வெளியீட்டு விழாவில் சர்சை குறித்து பேசிய சந்தானம், “ரசிகர்களை ஜாலியாக சிரிக்க வைக்க வேண்டும். இது தான் என் வேலை. மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமோ அல்லது யாரையும் தாக்கி பேச வேண்டும் எண்ணமோ எனக்கு நிச்சயமாக கிடையாது. இது நான் கும்புடுகிற கடவுளுக்கு தெரியும். நேசிக்கிற ரசிகர்களுக்கு தெரியும்” என்றார்.