ADVERTISEMENT

"எனக்கும் வருத்தமாகத் தான் இருக்கு" - ரஜினி

12:17 PM Oct 16, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. இதையடுத்து புதிதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்திற்காக கைகோர்த்துள்ளார்.

இப்போது தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரத்தில் சமீபத்தில் தொடங்கியது. அங்கு அவரைப் பார்க்க ரசிகர்கள் படப்பிடிப்பு பகுதிகளில் கூடிவிட்டனர். பின்பு ரஜினியைக் காரில் கண்டதும் ஆரவாரம் செய்து வரவேற்பு அளித்தனர். பின்பு திருநெல்வேலியில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் கெட்டப்புடன் 46 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை வந்துள்ளேன் என ரஜினி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனிடையே கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்தது.

இந்த நிலையில் தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் பேசுகையில், "புவனா ஒரு கேள்விக்குறி படத்திற்காக 1977ல் வந்தேன். 46 வருஷம் கடந்துவிட்டது. அதன் பிறகு இப்போது தான் வருகிறேன். ரொம்ப அன்பான மக்கள். பார்ப்பதற்கே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. எல்லாரிடமும் போட்டோ எடுக்கவில்லை என்ற வருத்தம் எனக்கும் இருக்கு" என்றார்.

பின்பு லியோ பட ரிலீஸ் குறித்து கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த அவர், "லியோ படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள். அதற்காக ஆண்டவனை வேண்டுகிறேன்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT