Skip to main content

"நின்னு சண்டை செய்யணும்" - விஜய் பேச்சு குறித்து சீமான்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

seeman about vijay speech in leo success meet

 

விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறார். சமீப காலமாகத் தீவிரமாக அது செயல்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அவர் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ஒருபேச்சு இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் நேற்று மாலை அவர் நடித்த லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் பல்வேறு விஷயங்களைப் பேசிய விஜய், "2026ல் கப்பு முக்கியம் பிகிலு" என சொன்னார். அது தற்போது அரசியல் வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "அரசியல் கட்சி துவங்குகிற ஒவ்வொருவருக்கும் இருக்கிற கனவு தான் அது. அதிகாரத்துக்கு வர வேண்டும் என்று மட்டும் சொல்ல முடியாது. விஜய்க்கு அந்த கனவு இருக்கிறதென்றால் அதை வாழ்த்த வேண்டும். ஒருத்தருடைய முதுகுக்கு பின்னாடி நாம் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருக்கு. தட்டி கொடுக்கிறது தான். அதனால் தம்பியை தட்டி கொடுப்போம். அவ்வளவு தான் நாம் செய்ய முடியும். 

 

எப்போதுமே வரலாற்றை பார்க்கையில், எந்த ஒரு தலைவன் வருகைக்காகவும் அது காத்திருந்ததில்லை. இருக்கிற ஒருவனை கையை பிடிச்சு கூட்டிட்டு போய் நடந்து விடும் என்கிறார்கள். இது உலகம் முழுவதும் இருக்கிற தத்துவ நிலைப்பாடு. அதில் விஜய் வரணும்னு நினைக்கிறார். அதற்கான வேலைகளை செய்கிறார். வரட்டும். வாழ்த்துவோம். என்ன கோட்பாடுகளை எடுத்து வைக்கிறோம், என்ன கொள்கைகளை முன்வைக்கிறோம், அதை மக்கள் ஏற்கும் பொழுது தான் வெற்றி பெறும். அதனால் ஒன்றே ஒன்று சொல்ல தோன்றுகிறது. ஜெயிப்பது அவ்வளவு எளிதல்ல. எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மட்டும் பார்த்து வருகிறோம். விபத்து விதியாகிவிடாது. 

 

ஜெயலலிதா புது கட்சி தொடங்கியிருந்தால் அது ஜெயித்திருக்குமா என யோசிக்கணும். எம்.ஜி.ஆர் கட்டமைச்சு வைக்கப்பட்ட கட்சி அது. அவரே முதலில் கட்சி தொடங்க பயந்துட்டார். திமுகவிலிருந்து வெளியே போய்ட்டு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. திருப்பி கட்சியை சேர்த்துவிடலாம் என பெரும் முயற்சி எடுத்திருக்கிறார். பின்பு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும்போது, சரி நின்னு தான் பாப்போம் என ஆரம்பிச்சார். அப்போது கலைஞர் மட்டும் தான் இருக்கிறார். ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், காமராஜர், பெரியார் என பெரிய தலைவர்கள் அனைவரும் மறைந்துவிட்டனர். கலைஞரை எதிர்க்க யாருமே இல்லை. கலைஞரும் எம்.ஜி.ஆரை அனுப்பி விடுகிறார். 

 

எம்.ஜி.ஆரை பார்த்து என்.டி.ஆரும் அங்கு கட்சி துவங்கிவிட்டார். அதன் பிறகு அங்கு கட்சி ஆரம்பித்த சிரஞ்சீவி, பவன் கல்யாண் அந்த அளவிற்கு கட்சியை எடுத்துப்போக முடியவில்லை. இங்கேயுமே மிக வலிமையாக இருந்தது விஜயகாந்த். அவங்களும் உறுதியாக நின்றார்கள். கடுமையாக உழைத்தார்கள். 10 விழுக்காடு வரை தொட்டார்கள். அதனால் நின்னு சண்டை செய்யணும். விஜயகாந்த் நின்னு சண்டை செய்யாமல் ஜெயலலிதாவிடம் கூட்டணிக்கு சென்றதால் அங்கு சரிந்துவிட்டார். 

 

ஏனென்றால் நாம் எடுத்து வைப்பது மாற்று. அப்படி இருக்கையில் அந்த கட்சிகளோடு திரும்ப கூட்டணி வைக்கும் பொழுது அது மாற்று இல்லாமல் ஏமாற்றாக மாறி விடுகிறது. அதனால் நிலைச்சு நிக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை நெருங்க முடியும். ஒரே நாளில் ஒரே நொடியில் வெற்றி என்பதை சாத்தியப்படுத்த முடியாது. அப்படி நடந்தால் அது பெரும் புரட்சி ஆகிவிடும். அப்படிப்பட்ட விஷயம் இருக்கிறதா என்றால் அது யோசிக்க வேண்டும். அதனால் விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துகிறேன்" என்றார். மேலும் தொடர்ந்து விஜய் குறித்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்க, "ஓர் அளவிற்கு மேல பேச முடியாது. ஏன்னா என் அன்பிற்குரிய தம்பி அவர்" என்றார்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.