ADVERTISEMENT

பிரபல நிறுவனம், திரையரங்கில் ஒத்திகை!

11:00 AM May 25, 2020 | santhoshkumar

ADVERTISEMENT


கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான ஷாப்பிங் மால் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT


கரோனா பாதிப்பு இன்னும் குறையவே இல்லாத காரணத்தால் மீண்டும் பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் திரும்புவார்களா, அரசு அனுமதி வழங்குமா என்ற சந்தேகத்தில் பலரும் உள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல மல்டி ப்ளக்ஸ் நிறுவனமான பி.வி.ஆர். குழுமம், கரோனா தொற்று முடிவடைந்தவுடன் மக்களுக்குத் தொற்று பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை ஒத்திகை செய்து பார்த்துள்ளது. அருகருகே அமராமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, ஒரு சீட்டிற்கு மற்றொரு சீட்டிற்கும் இடையில் நீளமான தடுப்பு வைக்கபட்டு பல முறைகளைச் செயல்படுத்தி ஒத்திகை பார்த்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT