ADVERTISEMENT

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரியா பவானி சங்கர் திரைப்படம் !

11:02 AM Dec 14, 2021 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துவருகிறார். இதனிடையே பிரியா பவானி சங்கர், இயக்குநர் சர்ஜுன் கே.என். இயக்கும் ‘ப்ளட் மணி' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிஷோர், ஷிரிஷ், பஞ்சு சுப்பு, ‘ராட்சசன்’ வினோத் சாகர், ‘கலைமாமணி’ ஶ்ரீலேகா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் இர்பான் மாலிக் தயாரிக்க, சதீஷ் ரகுநாதன் இசையமைக்கிறார். ‘ப்ளட் மணி' திரைப்படம் வரும் 24ஆம் தேதி நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இப்படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் கூறுகையில், "‘ப்ளட் மணி' படத்தில் நான் உணர்ச்சிகரமான பத்திரிகையாளராக நடிக்கிறேன். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல, பத்திரிகையாளராக வாழ்க்கையை ஆரம்பித்த நான் இப்படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறேன். பல ஆச்சர்யங்களும், திருப்பங்களும் நிறைந்த, இந்த அற்புதமான சஸ்பென்ஸ் டிராமா படத்தில் நானும் பங்கேற்றிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி" எனக் கூறியுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் சர்ஜீன் கே.என் கூறுகையில், "ஜீ5 இன் மிகச் சிறப்பு மிகுந்த படைப்புகளில் ஒன்றான 'பிளட் மணி' படத்தின் இயக்குநராக இருப்பது மிகப் பெருமையான தருணமாகும். வியத்தகு லொகேஷன்களில், சிறந்த நடிகர்களுடனான, மிக அற்புதமான படப்பிடிப்பு அனுபவங்கள் என, 'பிளட் மணி' என் வாழ்வின் சூப்பர் ஸ்பெஷல் திரைப்படம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT