ADVERTISEMENT

''இதைப்பற்றி கேட்டபோது முற்றிலும் பேரழிவு ஏற்பட்டதுபோல் உணர்ந்தேன்'' - பிரித்திவிராஜ் வேதனை!

12:29 PM Jun 08, 2020 | santhosh

ADVERTISEMENT


'காதல் சொல்ல வந்தேன்' படத்தில் நாயகியாக நடித்தவர் மேக்னா ராஜ். இவர் தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT


கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் மிகவும் பிரபலமானவர் மேக்னா ராஜ். மேக்னா ராஜ், கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவைக் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகும் பிஸியாக சினிமாக்களில் நடித்து வந்தார் மேக்னா. கடந்த ஜூன் 6ஆம் தேதி மேக்னாவின் கணரான சிரஞ்சீவிக்குத் திடீரென நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் சர்ஜாவைக் காப்பாற்ற முடியவில்லை. சிரஞ்சீவி சர்ஜாவுக்கு வயது 38தான் ஆகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுனின் மருமகன் தான் சிரஞ்சீவி சர்ஜா என்பது நினைவு கூரத்தக்கது. இவர் நாயகனாக 22 படங்களில் நடித்துள்ளார். அர்ஜுன் சர்ஜாவின் இந்தத் திடீர் மறைவு கன்னட திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரின் மறைவிற்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பிரித்திவிராஜ், ''சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மறைவு பற்றி கேட்டபோது முற்றிலும் பேரழிவு ஏற்பட்டதுபோல் உணர்ந்தேன். மேக்னாவிற்காக நான் பிரார்த்திக்கிறேன். அவரது முழுக் குடும்பமும் இந்த அதிர்ச்சி மற்றும் துக்கத்தில் இருந்து மீண்டு வர வலிமை கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்'' எனச் சமூகவலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT