ADVERTISEMENT

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

11:42 AM Mar 01, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் மணிரத்னம், கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

கரோனா காரணமாக பாதியில் முடங்கிய பணிகள், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து கடந்த 50 நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, தற்போது நிறைவுபெற்றுள்ளது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக படக்குழு விரைவில் ஜெய்ப்பூர் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதால், ஜெய்ப்பூரில் நடைபெறும் படப்பிடிப்பே இறுதிகட்டப் படப்பிடிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT