ADVERTISEMENT

“தமிழ் சினிமாவில் எனக்கு சப்போர்ட் செய்ய யாரும் இல்லை, இருந்திருந்தால்”- குட்டி ராதிகா வருத்தம்!

10:59 AM Sep 06, 2019 | santhoshkumar

கடந்த 2003ஆம் ஆண்டு எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் வெளியான படம் இயற்கை. இப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் கன்னட நடிகை குட்டி ராதிகா. அதன் பிறகு சில படங்களில் நடித்தவர் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி. குமாரசாமியை திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகள் சினிமா பக்கம் வராத குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.


ஹீரோயினை மையப்படுத்தும் கதை அம்சம் கொண்ட தமயந்தி என்ற படத்தில் இவர் நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுகு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகிறது. மலையாளம், ஹிந்தியில் டப் செய்து வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. நவரசன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “கன்னட சினிமாவில் நுழையும்போது என்னுடைய வயது 14. சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. சினிமாவில் என்ன மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு என் குடும்பத்துக்கும் தெரியாது. எனக்கும் சின்ன வயது. கதைகூட கேட்காம எல்லா படத்துலயும் நடிப்பேன்.


தமிழ் சினிமாவுல ‘இயற்கை’ திரைப்படத்துல நடிக்கும்போது 15 வயதுதான். முதல் படமே தேசியவிருது வாங்கினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ‘இயற்கை’ படத்தோட படப்பிடிப்புலதான் தமிழையே கத்துக்கிட்டேன். ஆனா அந்தச் சமயத்துல எனக்குப் படங்கள்ல நடிக்கிறது சம்பந்தமா கால்ஷீட் கொடுக்கறதுக்கும், கோலிவுட்டில் வழிகாட்டவும் யாருமே இல்லை. உண்மையைச் சொல்லணும்னா எனக்குத் தமிழ் சினிமாவில் நல்ல காட்பாதர் கிடைச்சிருந்தா கோலிவுட்டிலேயே செட்டில் ஆகிருப்பேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT