கேரளாவில் பலத்த மழை பெய்துவருவதை போன்று, கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மலைப்பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளமும், மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சரான எச்.டி. குமாரசாமி ஹெலிகாப்டாரில் வெள்ளப்பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட குடகு பகுதிகளை பார்வை மேற்கொண்டார்.
இந்நிலையில், வெள்ள பாதிப்பால் வீட்டை இழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் நிதிஉதவி அளிப்பதாக குமாரசாமிதெரிவித்துள்ளார்.