ADVERTISEMENT

யானை கொல்லப்பட்ட சம்பவம்: கண்டனம் தெரிவித்த நிவின் பாலி!

05:18 PM Jun 04, 2020 | santhoshkumar


கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட பைனாப்பிளை கொடுத்துள்ளனர். இதை சாப்பிட்ட யானையின் வாய் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதனை தொடர்ந்து வாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியை பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கியது. இறங்கிய அடுத்த சிறிது நேரத்தில் யானை உயிரிழந்துள்ளது. பின்னர் வனத்துறையினரால் அந்த யானை கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் அந்த யானை கர்ப்பமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. இதனை அடுத்து காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களின் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் பலரும் இந்த சம்பவத்திற்கு தங்களின் கண்டனத்தை பதிவிட்டுள்ள நிலையில், மலையாள பட சூப்பர் ஸ்டாரான நிவின் பாலி இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “இந்த மாதிரியான சம்பவங்கள் கண்டனத்திற்குறியது. விலங்குகளுக்கு எதிரான அட்டூழியங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதனுடன் இந்த சம்பவம் குறித்து வெளியாகி வைரலான ஒரு கார்ட்டூன் சித்திரத்தையும் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT