
கோப்புப்படம்
கோவையில் காட்டு யானை மயங்கி விழுந்த நிலையில் வனத்துறையினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய தடாகம் அருகே வனத்தை ஒட்டியுள்ள இடத்தில் காட்டு யானை ஒன்று உடல்நலக்குறைவால் மயங்கிக் கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை நடக்கச் செய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். யானை வறண்ட காட்டில் வெயிலில் கிடந்ததைக் கண்டு அதற்கு நிழற்கூடம் அமைக்கப்பட்டது. யானை மயங்கி விழுந்து கிடப்பது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)