ADVERTISEMENT

விஜய் வீட்டில் தேசியக் கொடி; பிரதமர் மோடியின் கோரிக்கை ஏற்பு

03:35 PM Aug 13, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் மோடி 13 ஆம் தேதி முதல் 15 தேதி வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என்று மக்களுக்கு கோரிக்கை வைத்தார். அதோடு அனைவரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவும் அறிவுறுத்தினார். அதன் படி ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தின் முகப்பு படத்தில் தேசியக் கொடியை வைத்தார். மேலும் நேற்று தன் வீட்டிற்கு முன்பு தேசியக் கொடியையும் பறக்கவிட்டார்.

இந்நிலையில் நடிகர் விஜய் மோடி விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தேசியக் கொடியை பறக்கவிட்டுள்ளார். மேலும் அமீர்கானும் தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதே போல் சமீபத்தில் நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி உள்ளிட பல திரை பிரபலங்கள் தங்கள் வீட்டின் முன்பு தேசியக் கொடி ஏற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT