ADVERTISEMENT

'நரகாசூரன்' படத்தை கைவிட்ட கெளதம் மேனன்!

01:49 PM Jul 20, 2018 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

துருவங்கள் 16 படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கெளதம் மேனனும், இயக்குனர் கார்த்திக் நரேனும் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் மோதிக் கொண்டது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் முடிந்து தணிக்கை குழுவிற்கு இப்படத்தை படக்குழு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் அதில் இதுவரை படத்தின் தயாரிப்பாளர்கள் கெளதம் மேனன் மற்றும் பத்ரி கஸ்தூரி என முன்னர் அச்சடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஷ்ரதா எண்டெர்டைன்மென்ட் சார்பாக தயரிப்பாளர் பத்ரி கஸ்தூரி தயாரிப்பு என்று மட்டும் அச்சடிக்கப்பட்டிருபதால் இயக்குனர் கெளதம் மேனன் இப்படத்தில் இருந்து முற்றிலும் விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT