ADVERTISEMENT

ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்த மோகன்லால்

04:14 PM Apr 09, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லாலிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் கதை கேட்ட பிறகு அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரம் ஊழல் செய்து அதிகமாக சொத்து சேர்க்கும் அரசியல்வாதி கதாபாத்திரம் என்பதால் மோகன்லால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து படக்குழு மாநாடு படத்தின் மூலம் பெரும் கவனம் பெற்ற எஸ்.ஜே சூர்யாவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இது குறித்து எந்தவிதமான அறிவிப்பு படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT