ADVERTISEMENT
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அவர் செய்த நல்ல விஷயத்தை தொடர்வதாக அருண் விஜய், ஜெயம் ரவி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இந்த நிலையில், விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டம் பற்றிய அறிவிப்பை தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தன் புகழையும், திறனையும், சிந்தனையையும் மக்களுக்காக அர்ப்பணித்த, எங்கள் சங்கத்தின் பெருந்தூணாய் விளங்கிய எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 19.01.2024 அன்று மாலை 6 மணியளவில் சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Show comments