ADVERTISEMENT

நடிப்பு கத்துக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்

05:32 PM Apr 08, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மலையாளத்தில் 'லுசிபார்', 'ஓடியன்' உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான அனீஸ் மேனன் மீது இளம்பெண் ஒருவர் மீ டூ புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், எனக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம். குறிப்பாக மோனோ ஆக்ட். இதனை உணர்ந்த என் பெற்றோர் குழந்தைகளுக்கு மோனோ ஆக்ட் மற்றும் நாடகம் என இரண்டையும் கற்றுக்கொடுக்கும் அனீஸ் மேனன் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர். நானும் வகுப்பிற்கு சென்று வந்தேன். என் மீதி அதிக அனுப்பு கட்ட தொடங்கிய அவர் நாளாக நாளாக என்னிடம் அதிக சுதந்திரம் எடுத்துக் கொண்டார். கன்னங்களை தொடுவது, உடலை தொடுவது என பாலியல் சீண்டலில் ஈடுபட தொடங்கினர். பொசிஷன் திருத்தம், தோரணை அழகு எனக் குறி என்னுடைய அந்தரங்க உறுப்புகளை தொட ஆரம்பித்தார்.

இதனை நடிப்பின் ஒரு பகுதி என்று என் பெற்றோர்களையே நம்ப வைத்துவிட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் சென்ற அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த நேரத்தில் அழுகையாகவும், பயமாகவும், இருந்தது. இதையடுத்து எனக்கு நடிப்பு பயிற்சி வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறி விட்டேன். இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர எனக்கு பல வருடங்கள் ஆனது. என்னை போல நிறைய பேர் அனீஸ் மேனனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்னை போன்ற ஒருவர் வெளிப்படையாக பேசினால் மற்றவர்களுக்கு தைரியம் வரும் என்பது எனது நம்பிக்கை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அனீஸ் மேனன் மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் மகளாக வரும் அனிசபா குளிக்கும் போது படம் பிடித்து மிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT