இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் நடத்தி வரும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி சென்னையில் இன்று நடக்கவிருந்தது. விஜயகாந்த்தின் மறைவையொட்டி இன்று நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.