இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலிருந்து சிறிது பிரேக் எடுக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலாவதாக, எனது பேனரான ஜி ஸ்குவாட்டின் கீழ் முதல் படமாக வழங்கிய 'ஃபைட் கிளப்'-க்கு நீங்கள் அளித்த அன்பு மற்றும் ஆதரவுக்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
எனது அடுத்த படத்தின் கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதால் சமூக வலைத்தளங்களுக்கு சிறிது பிரேக் எடுக்கவுள்ளேன். நான் அறிமுகமானதில் இருந்து நீங்கள் என் மீது பொழிந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் பார்வையாளர்களுக்கும் மீண்டும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அதுவரை அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். பாசிடிவாக இருக்கவும் நெகட்டிவிட்டியை புறக்கணிக்கவும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.