ADVERTISEMENT

“எனக்கு யாரும் ஆதரவாக இல்லை” - நடிகையின் தற்கொலை வழக்கில் சிக்கிய கடிதம்

10:28 AM Sep 19, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் நடிகை பவுலின் எனும் தீபா. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(18.9.2022) காலை அவரது உறவினர்கள் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் செல்போன் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் உடனடியாக அவரது நண்பரை தொடர்பு கொண்டு இந்த விஷயத்தை சொல்லி நேரில் சென்று பார்க்க சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

அப்படி தீபாவின் நண்பர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தீபாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இவரது தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணம் என தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து நடிகை தீபாவின் அறையை போலீசார் சோதனை செய்த போது, அவர் எழுதி வைத்ததாக சொல்லப்படும் கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அதில், “நான் ஒருவரைக் காதலித்தேன். ஆனால், அவர் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. இதனால், இந்த உலகில் வாழ விரும்பவில்லை” என்று குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் போதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT