ADVERTISEMENT

"10 நாட்களில் 4வது சம்பவம்" - படப்பிடிப்பில் பகீர் புகார்

04:48 PM Jul 27, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மராத்திய மொழியில் 'சுக் மாஞ்சே நக்கி காய் அஸ்த' என்ற தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாகச் சிறுத்தைப் புலி ஒன்று அங்கு புகுந்துள்ளது. அதைப் பார்த்த கலைஞர்கள் அலறியபடி இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, "கடந்த 10 நாட்களில் இதுபோன்ற மூன்றாவது அல்லது நான்காவது சம்பவம் இது. 200க்கும் மேற்பட்டோர் செட்டில் இருந்தனர். யாராவது உயிரை இழந்திருக்கக் கூடும். தங்களின் பாதுகாப்புக்கு அரசு தீவிர நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஃபிலிம் சிட்டியில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" எனக் கூறியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT