ADVERTISEMENT

கே.ஜி.எஃப் பட நிறுவனத்தின் அடுத்த படைப்பு; ஹீரோவாக அறிமுகமாகும் வாரிசு நடிகர்

04:21 PM Apr 27, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப். சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த இரண்டு படங்களையும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிறுவனம் அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தயாரித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியான நிலையில் இந்நிறுவனம் தற்போது சிவராஜ்குமாரின் பேரனை சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகம் செய்யவுள்ளது. அதன்படி மறைந்தராஜ் குமாரின் பேரன் யுவ ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநரான சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்கவுள்ளார்.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் மறைந்த ராஜ் குமார். இவரின் மூன்று மகன்களான சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனீத் ராஜ்குமார் ஆகியோர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களின் அந்தஸ்தில் பல படங்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் ராகவேந்திரா ராஜ்குமாரின் மகன் யுவ ராஜ்குமார் சந்தோஷ் ஆனந்த் ராம் இயக்கும் படத்தின் மூலம் சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். கடந்த ஆண்டு சிவராஜ் குமாரின் மூன்றாவது மகன் புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT