ADVERTISEMENT

"அற்புதம்மாளின் இந்த சிரிப்பை காண பல வருடங்களாக காத்திருந்தேன்" - கார்த்திக் சுப்புராஜ்

05:49 PM May 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவிப்பதோடு, பேரறிவாளனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "அற்புதம்மாளின் முகத்தில் இந்த சிரிப்பை காண பல வருடங்களாக காத்திருந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இவரை தொடர்ந்து கவிஞர் வைரமுத்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில்...

"இரும்புக் கம்பிகள்
இளமையைத் தின்று தீர்த்தபிறகு
ஒரு மனிதன் வெளியே வருகிறான்

தமிழ்நாட்டு அரசுக்கும்
உச்ச நீதிமன்றத்திற்கும்
வணக்கம்

பேரறிவாளனுக்குத் திறந்த
அதே வாசல் வழியே
சம்பந்தப்பட்ட ஏனையோரும்
வெளிவருமாறு
வெளிவர வேண்டும்
நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT