முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அவரைவிடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு பலரும்பாராட்டுகளைதெரிவிப்பதோடு, பேரறிவாளனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர்ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி. அற்புதம்மாள் மற்றும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி.. @ArputhamAmmal …. Best wishes #Perarivalan #PerarivalanRelease
— G.V.Prakash Kumar (@gvprakash) May 18, 2022