இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்தி, கைதி 2 குறித்து பேசினார். கைதியில் நடித்த டில்லி கதாபாத்திர வசனமான, “உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிகிட்டு இருந்தன்னு தெரியாதுல...” என்று பேசிய அவர், “டில்லி திரும்பி வருவான். அடுத்த வருஷம் ஆரம்பித்துவிடுவோம்” என்றார். மேலும் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களை முடித்து விடுவதாகவும், லோகேஷும் ரஜினி படத்தை முடித்துவிட்டு ‘கைதி 2’ எடுக்கவுள்ளதாக கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.