ADVERTISEMENT

'இந்த 21 நாட்கள் என்னென்ன செய்யலாம்' - காஜல் அகர்வால் யோசனை

11:16 AM Mar 26, 2020 | santhosh

உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்தியாவில் இதன் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 21 நாட்கள் எப்படி சுயக்கட்டுப்பாட்டை பழகிக்கொள்வது குறித்து நடிகை காஜல் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். அதில்...

ADVERTISEMENT

ADVERTISEMENT

"புதிய பழக்கங்களையும், வழக்கத்தையும் ஆரம்பிக்க இந்த 21 நாட்கள் சரியான கால நேரம் ஆகும். நான் ஏற்கெனவே சில இணையப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்திருக்கிறேன். புத்தக வாசிப்பை அதிகரித்திருக்கிறேன். தியானம், சமையல், வீட்டு வேலை, குடும்பத்துடன் நல்ல நேரத்தைச் செலவிடுதல் என ஆரம்பித்துவிட்டேன். உங்கள் நேரத்தை நீங்களும் எப்படிப் பயனுள்ளதாக ஆக்குகிறீர்கள் என்று எனக்குச் சொல்லுங்கள். அடுத்த 21 நாட்கள் சுயக் கட்டுப்பாட்டைப் பழகிக்கொள்ள இது சிறந்த வாய்ப்பு ஆகும்'' என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT