ADVERTISEMENT

சர்ச்சைக்கும் பஞ்சமில்லை, விருதுக்கும் பஞ்சமில்லை - தொடரும் 'ஜெய் பீம்' விருது வேட்டை

05:35 PM May 05, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டினர். ஆனால் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் கூறி ஜெய் பீம் படக்குழு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான புகாரில் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் த.செ உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இப்படம் பல்வேறு சர்வதேச அரங்கில் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் 12வது தாதாசாகேப் பல்கே சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வாங்கிய நிலையில் தற்போது போஸ்டன் திரைப்பட விழாவில், சிறந்த கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர்கான விருது எஸ்.ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்கு இணையாக ஜெய் பீம் படம் விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. ஏற்கனவே இப்படம் ஆஸ்கர் தகுதி பட்டியல் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT