ex kerala minister shailaja teacher tweet about jaibhim movie

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த 2ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. 90களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் ஜெய் பீம் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்," ஜெய் பீம் திரைப்படம் ஒரு மாற்றத்திற்கான உத்வேகம். சமூகத்தின் வன்முறை மற்றும் சமூக பாகுபாடு குறித்து கடினமான உண்மைகளை சித்தரித்துக் காட்டுகிறது. பிரமாதமாக எடுத்துள்ளனர் ஜெய் பீம் படக்குழுவினர், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment