மலையாள திரையுலகில் முன்னணி நடிகர் பஹத் பாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரம் மற்றும் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார். சமீபத்தில் இவர், தனது மனைவியும் நடிகையுமான நஸ்ரியா நசிமோடு இணைந்து 'சீ யூ சூன்' என்ற திரைப்படதத்தை தயாரித்து நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஐ போனில் எடுக்கப்பட்ட அந்த படம், அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
பஹத் பாசில், சீ யூ சூன் படத்திற்கு பிறகு இருள் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 20 ஆம் தேடி முடிவடைந்தது. அதை தொடர்ந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது திரைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Here is the title look poster of #Irul ?@AJFilmCompany pic.twitter.com/tRIdEbDZqw
இந்தநிலையில் இருள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படம் ஒரு திரில்லர் படம் என தகவல்கள் வந்த நிலையில், படத்தின் போஸ்டர் அதை உறுதி செய்வது போல் உள்ளது. அறிமுக இயக்குனர் நஜீப் யூசுப் இஸ்சுதீன் இப்படத்தை இயக்குகிறார். இவர் தும்பாட் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.