Nazriya again in Tamil cinema; Fans in delight

2013-ல் வெளியான நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நஸ்ரியா. அதனைத் தொடர்ந்து ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும், திருமணம் எனும் நிக்காஹ் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானார். பின்னர் பிரபல மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். 2018-ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தார்.

Advertisment

இந்நிலையில் தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்டி சுந்தரானிகி’ படத்தில் ஹீரோயினாக நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் உருவாக்கப்பட்ட இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூன் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் `அடடே சுந்தரா’ மற்றும் மலையாளத்தில் 'ஆஹா சுந்தரா’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் டீசர் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவின் திரைப்படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisment