'வெயில்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் அதன் பின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார். கையில் பத்து படங்களுக்கு மேல் வைத்து பிசி நாயகனாக இருக்கும் இவர் தனது 32வது பிறந்தநாளை நேற்று வசந்தபாலன் இயக்கும் படத்தின் செட்டில் கொண்டாடினார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
பின்னர் தன் இசை பயணத்தை பற்றியும், நடிப்பதை பற்றியும் ஜி.வி.பிரகாஷ் பேசும்போது... "என்னுடைய குடும்பமே சினிமா குடும்பம் தான். என் மூன்று வயதில் மாமா (ஏ.ஆர்.ரஹ்மான்) என்னை பாட வைத்தது நினைவிலேயே இல்லை. சினிமாவை என்னுடைய உயிராக நினைத்து வேலை செய்கிறேன். நான் நடிக்கும் படங்கள் ஜாலியாக இருந்தாலும் நான் நடிப்பை அப்படி விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அறிமுகமாகும் போதே 'ஆடுகளம்' நரேன் அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டுதான் சினிமாவில் நடிக்க வந்தேன்" என்றார்.
Show comments