ADVERTISEMENT

தன்னுடைய இரண்டு படங்கள் வெளிவராத நிலையில் நடிகரான கவுதம் மேனன்...

05:12 PM Jun 28, 2019 | santhoshkumar

நடிகர் சிபிராஜ் அறிமுக இயக்குநர் அன்பு இயக்கத்தில் வால்டர் என்றொரு படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா நடிக்கிறார். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில்தான் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காவல்துறை அதிகாரியாக சிபிராஜ் நடிக்கும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது இந்த படத்தில் இயக்குநர் கௌதம் மேனனும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக பதிவிட்டு உறுதி செய்துள்ளார். சமுத்திரக்கனி, கவுதம் மேனன் ஆகியோருடன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கவுதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோருடன் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சிபிராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு பல வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து கவுதம் மேனன் வேறு என்ன படத்தை இயக்குவார், எது வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்தால் அவர் நடிக்க தொடங்கிவிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT