ADVERTISEMENT

'ஜவான்' படம் விஜயகாந்த் படத்தின் கதை - அட்லீ மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

05:11 PM Nov 04, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ தொடர்ந்து ஹிட் படங்களைக் கொடுத்து தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். குறிப்பாக முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து பலரது கவனத்தைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'ஜவான்' படத்தின் கதை விஜயகாந்த் நடித்த 'பேரரசு' படத்தின் கதை எனக் கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக வருகிற 9ஆம் தேதிக்கு மேல் விசாரணை நடத்தத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் வெளியான 'ராஜா ராணி' படம் 'மௌன ராகம்' படத்தைப் போல் இருப்பதாகவும் பின்பு 'மெர்சல்' படம் 'மூன்று முகம்' படம் போல் உள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது 'ஜவான்' படத்திற்கும் இந்த சர்ச்சை எழுந்துள்ளதால் கோலிவுட்டில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT