Skip to main content

"விஜய் நம்பிக்கை கொடுத்தார்; அஜித் அழைப்பார் என்று நம்புகிறேன்" - மனம் திறக்கும் 'ஐங்கரன்' இயக்குநர் 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

 Director Ravi Arasu

 

ரவியரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஐங்கரன் திரைப்படம், கடந்த 12ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வணிக ரீதியிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ரவியரசுவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் ஐங்கரன் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

இந்த வெற்றிக்காகத்தான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். இதற்கிடையே நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஐங்கரன் ரிலீஸ் ஆகவும் பார்த்துக்கொள்ளலாம் என்று எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்குள் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளேன். 

 

எனக்கு மோட்டிவேஷன் ரொம்பவும் பிடிக்கும். எப்பவுமே மற்றவர்களை மோட்டிவேட் பண்ணிக்கொண்டே இருப்பேன். அதனால்தான் முதல் படத்தில் ஸ்போர்ட்ஸ், இரண்டாவது படத்தில் கண்டுபிடிப்பு என மோட்டிவேஷனுக்கு தொடர்புடைய கதைக்களத்தையே தேர்ந்தெடுத்தேன். நான் அஜித் சாரோட தீவிர ரசிகர். அவரிடமிருந்து எனக்கு அழைப்புவரும் என்று நம்புகிறேன். அப்படி வந்தால் நிச்சயம் அவருக்கு கதை சொல்லுவேன். ஏற்கனவே விஜய் சாருக்கு ஒரு கதை சொன்னேன். அவருக்கு அந்தக் கதை ரொம்பவும் பிடித்திருந்தது. ஆனால், அந்தக் கதையில் அவரால் நடிக்கமுடியவில்லை. அதேநேரத்தில், இந்தக் கதை கண்டிப்பாக ஜெய்க்கும். வேறு ஹீரோ யாரையாவது வச்சு பண்ணுங்க என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். 

 

இளம் விஞ்ஞானி ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது சில தகவல்கள் கிடைத்தன. அதை வைத்து படம் எடுத்தால் என்ன என்று யோசித்து ஐங்கரன் படத்திற்கான கதையை எழுத ஆரம்பித்தேன். கதை எழுதுவதற்கே ஒருவருடம் வரை காலமெடுத்தது. படத்திற்கு நிறைய பாசிட்டிவ் ரிவ்யூஸ் வந்ததற்கு அதுதான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அந்த இளம் விஞ்ஞானி, டூவிலர் டயருக்குள் அலுமினியம் பயன்படுத்தி ஒரு வகையான டயரை வடிவமைத்திருந்தார். அந்த டயர் பஞ்சரே ஆகாது. அதை அவர் பேட்டன் ரைட்ஸுக்காக சமர்ப்பித்தபோது நிராகரித்துவிட்டனர். அதற்கு பின்னால் டயர் நிறுவனங்களின் வணிக அரசியல் இருந்தது. இது மாதிரியான விஷயங்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.

 

முதல்நாள் ஷூட்டிங் முடிந்த உடனேயே இந்தக் கதைக்கு ஜி.வி. பிரகாஷ் ரொம்பவும் பொறுத்தமாக இருப்பார் என்ற நம்பிக்கை வந்தது. முடியாது முடியாதுனு வட்டவட்டமா நின்னு பேசிக்கிட்டு இருக்கீங்க, அதுக்கு முடியும்கிறவங்களுக்கு வாய்ப்பு கொடுத்துட்டு போகவேண்டியதுதானா, ஜெய்க்கிறவரை வீண் முயற்சினு சொல்லுவாங்க, ஜெய்ச்சுட்டா விடா முயற்சினு சொல்லுவாங்க டயலாக்ஸ்க்கு நல்ல கைத்தட்டல் கிடைத்தது. எழுதும்போதே இது பெரிய அளவில் வொர்க்கவுட்டாகும் என்ற நம்பிக்கை இருந்தது. 

 

இளம் விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார் என்றால் உதவிகள் செய்து அவரை என்கரேஜ் பண்ணவேண்டும். பேட்டன் ரைட்ஸில் உள்ள சில விஷயங்களையும் சரி செய்தால் நம் ஊரில் நிச்சயம் நிறைய இளம் விஞ்ஞானிகள் உருவாகுவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் கவர்ந்ததா குறட்டை செண்டிமெண்ட்? - டியர் விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
gv prakash aishwarya rajesh starring dear movie review

குறட்டையால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக வெளியாகி இருக்கும் டியர் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்தது? 

மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் வியாதி இருக்கிறது. இதனால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தன் அம்மா, அண்ணன் வற்புறுத்தலின் பேரில் ஐஸ்வர்யா ராஜேஷை மணம் முடிக்கிறார். சிறிது சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை மிகப்பெரிய இடியாக வாழ்க்கையில் வந்து விழுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவு நாளடைவில் விவாகரத்து வரை சென்று விட இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றார்களா? அல்லது மீண்டும் இணைந்தார்களா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

gv prakash aishwarya rajesh starring dear movie review

நாம் இதற்கு முன் இதே போன்ற ஒரு கதையை பார்த்து இருப்பதால் கதையில் பெரிய சுவாரசியம் இருப்பதாக தோன்ற மனம் மறுக்கிறது. அதேபோல் இதற்கு முன் வெளியான படத்தில் நாயகனுக்கு குறட்டை பிரச்சனை, இந்த படத்தில் நாயகிக்கு குறட்டை பிரச்சனை. மற்றபடி கதைக்கும் திரைக்கதைக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லாமல் இந்த படம் வேறு ஒரு டிராக்கில் பயணிக்கிறது. வெறும் ஒரே ஒரு குறட்டையை வைத்துக் கொண்டு 2:30 மணி நேரம் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்றால் சற்று சந்தேகமே! ஒரு புதுமண தம்பதிக்கு திருமணம் நடந்த பிறகு அவர்கள் வெறும் தூக்கத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதேபோல் ஒரு குறட்டை என்று வரும் பட்சத்தில் அதிலிருந்து விடுபடும் நோக்கில் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாமே? போன்ற கேள்விகள் படம் பார்ப்பவர்கள் மனதில் எழ செய்வதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் படம் ஆரம்பித்து ஒரு நகைச்சுவை படமாகவும் இல்லாமல், ஒரு சீரியசான படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே பயணிப்பது சற்றே அயற்சியை கொடுத்து இருக்கிறது. அதே போல் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்பங்கள் இல்லாமல் படம் பிளாட்டாக செல்வது சுவாரசியத்தை குறைத்து இருக்கிறது.

ஜீவிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் டைட்டிலுக்கு கொடுத்த கிரியேட்டிவிட்டியின் முக்கியத்துவத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டிருக்கும். வழக்கமான நாயகனாக வந்து செல்கிறார் நாயகன் ஜி.வி பிரகாஷ். அவருடைய தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நடிக்க நன்றாக ஸ்கோப் இருந்தும் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஒரு நல்ல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதேபோல் தனது தோற்றத்திலும் சற்றே முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். ஜிவி பிரகாஷை விட இவருக்கு வயது அதிகம் போல் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

gv prakash aishwarya rajesh starring dear movie review

படத்தின் ஒரே ஒரு ஆறுதல் காளி வெங்கட்டின் நடிப்பு. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். ஜீவியின் அம்மாவாக வரும் ரோகிணி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில், இந்த படத்துக்கு ஜீவிதான் இசையா என்ற கேள்வி எழுப்பும் அளவிற்கு இசையை கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு சுமாரான இசையை படம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஜீவியின் ஆபீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு 2.30 மணி நேரம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் இந்த படத்திற்கான டைட்டிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்து இருக்கலாம். 


டியர் - பாவம்!

Next Story

“எனக்கும் ஜி.விக்கு நடந்த மாதிரி நடந்தது” - ஐஸ்வர்யா ராஜேஷ்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
aishwarya rajesh speech at dear movie press meet

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர்.  வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி  மற்றும் பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

ஜி. வி பிரகாஷ் பேசியதாவது, “வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள். ஆனால் இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள். அதனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது வருகிறது. டியர் திரைப்படம் ஐஸு ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம்” என்றார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, “எனக்கும் ஜி.விக்கு நடந்த மாதிரி நடந்தது. என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துகள். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். இந்தப்படம் ஷுட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்துகொள்வதைக் கேட்பதே வரம் தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம்.

இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். வருண்! தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவி தான். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது.  எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.