ADVERTISEMENT

மாரி செல்வராஜ் வீட்டிற்கு வந்த உதயநிதி ஸ்டாலின்... என்ன விசேஷம்?

01:24 PM Feb 23, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ் 10 வருடங்களுக்கு மேலாக இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். தனது முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்த மாரி செல்வராஜ் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை ஆழமாக பதிவு செய்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கியிருந்தார். இதில் முந்தைய படத்தை போலவே ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை சற்று ஓங்கி ஒலிக்கச் செய்திருப்பார்.

'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ள மாரி செல்வராஜ் சென்னையில் புது வீடு ஒன்று கட்டி குடியேறியுள்ளார். மாரிசெல்வராஜின் குருநாதர் இயக்குநர் ராம் ஆசீர்வாதத்தோடு நடந்த இந்த புதுமனை புகுவிழா நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு, சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலத்தை சார்ந்த நெருக்கமான நண்பர்கள் கலந்து கொண்டார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT