இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப்ராங்கிளின் ஜேக்கப் 'ரைட்டர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி போலீசாக நடித்துள்ளார். திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் தனது அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை பேசியுள்ள இப்படம் சமீபத்தில் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர் ப்ராங்கிளின் ஜேக்கப் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ப்ராங்கிளின் ஜேக்கப் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளார்.இத்தகவலை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.