மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான 'கர்ணன்' திரைப்படம், கடந்த வாரம் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நாட்டார் தெய்வமான காட்டுப்பேச்சி, அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மக்களின் ஒருமித்த போராட்டம், விலங்குகள் மூலம் கதை சொல்லல் எனப் படம் முழுவதும் தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதனையடுத்து, ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்புகளின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது கர்ணன் திரைப்படம்.
இந்த நிலையில், கர்ணன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் தனுஷ், ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "காட்டுப்பேச்சியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார்.