ADVERTISEMENT

‘தர்ஷன் நான் உன்னவிட்டு போறேன்... உனக்கும் ஷெரினுக்கும் இடையில நான் யாரு?’ - கண் கலங்கிய தர்ஷன் காதலி

10:36 AM Sep 07, 2019 | santhoshkumar

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனிலும் கமல் ஹாசன்தான் தொகுத்து வழங்குகிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியை மக்கள் பலரும் பார்த்து வருகிறார்கள் என்று கமல் ஹாசன் உள்ளே பங்குபெற்றிருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவுரை செய்வார். மக்கள் பலரும் பார்க்கும் நிகழ்ச்சியாக இது இருப்பதனால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் வரை வந்துள்ளது.

இந்நிலையில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் 74-வது நாளில் போட்டியாளர்கள் வனிதாவிற்கும் ஷெரினுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது வனிதா, ஷெரின் தர்ஷனுடன் காதலில் உள்ளதாக தெரிவித்தார்.


இந்த சர்ச்சையை அடுத்து தர்ஷன் எங்கள் இருவருக்குள்ளும் இருப்பது நட்பு மட்டும்தான் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என உருக்கமாக கூறியுள்ளார்.


தர்ஷனுக்கும் எனக்கு தெரிந்த ஒருவர் நான் கொடுக்கும் இண்டர்வியுவால்தான் தர்ஷனை டார்கெட் செய்கிறார்கள் என்று சொல்லும்போது என்னுடைய மனம் உடைந்துவிட்டது. நான் கொடுத்த ஒவ்வொரு இண்டர்வியுவிலும் தர்ஷனை பற்றி தவறாக கூறியது இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பேசியவர், “நான் கொடுக்கும் இண்டர்வியூவால்தான் அவர்கள் இருவரும் பிரேக்கப் செய்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். அது லவ்வா, நட்பா என்று ஒன்றுமே புரியவில்லை. என்னிடம் பலரும் நான் தான் தர்ஷன், ஷெரின் காதலுக்கு குறுக்கே இருப்பதாக சொல்கின்றனர். என்னை மன்னித்துவிடுங்கள் தர்ஷன் மற்றும் ஷெரின். நான் தர்ஷனை விட்டு விலகுகிறேன். அவர் வெளியே வந்தாலும் நான் பேசமாட்டேன்” என்று கண் கலங்க பேசியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT