Skip to main content

'என் இதயத்தை கவர்ந்தது 'பிக்பாஸ் 3' தர்ஷன் மட்டும் தான்' - சனம் ஷெட்டி ஏக்கம் !

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, இணைந்து நடித்து, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் 'மேகி' படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் நேற்று வெளியிடப்பட்டது. விழாவில் அப்பட நாயகியும், இப்படத்தின் தயாரிப்பாளருமான நடிகை சனம் ஷெட்டி நாயகன் 'பிக் பாஸ் -3' புகழ் தர்ஷன் குறித்து பேசும்போது....

 

sanam shetty

 

 

''சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார். அவர் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும். மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார். எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பிக்பாஸ்’ சனம் ஷெட்டி அளித்த புகாரில் தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020

 

bigboss sanam complaint dharshan chennai high court

 

பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி அளித்த புகாரில் பதிவான வழக்கில், தர்ஷனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று பிரபலமடைந்த தர்ஷன், தன்னைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்ச ரூபாய் மோசடி செய்ததாகவும், திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்து, தன்னையும் தன் குடும்பத்தையும் இழிவுபடுத்தியதாகவும், 4-வது சீசனின் போட்டியாளர் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

bigboss sanam complaint dharshan chennai high court

 

இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்கக் கோரி, தர்ஷன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய்ப் புகார் அளித்துள்ளதால், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இரு வாரங்களுக்கு, தினமும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தர்ஷனுக்கு நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

 

 

Next Story

“ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்கள்...”- சர்ச்சையாகும் மீராமிதுனின் வீடியோ

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் மீராமிதுன். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

meera mithun

 

 

அதில் , “ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. பிபி ஹவுஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே இருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் என்னுடைய ரசிகர்களும், நண்பர்களும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள். என்னுடன் ஒரு நாள் பேசுவார்கள், அதற்குமேல் பேசினால் அவர்களுக்கு பெண்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் இப்படி செய்வார்கள். ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்களுக்கு பொறாமை வரும் அப்படி இருந்தார்கள். அந்த வீட்டிற்குள் நடைப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள். 

சமூக வலைதளத்தில் என்னை திருநங்கை என்று கிண்டல் செய்வது, பீர் அடிக்கிறேன்,என்னை கருப்பு என்று கேலி பேசுவது எல்லாம் எந்த கூட்டம் செய்கிறது என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதையே தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். இனி நான் தினசரி ஒரு வீடியோ போட்டு அடிச்சிட்டே இருப்பேன். எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்றா கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோயின்களைவிட எனக்கு நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் லெவலுக்கு புகழ் இருக்கிறது. இதை நான் எங்குவேண்டுமானாலும் எழுதி தருகிறேன். அவங்களெல்லாம் தமிழ்நாடு தாண்டினா யாருக்குமே தெரியாது. அவங்க என்ன மிஞ்சிபோனா படம்தான நடிக்கிறாங்க, ஆனால் எனக்கு நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் புகழ் இருக்கிறது. என்னுடைய பெருமையை நானே பீற்றிக்கொள்ளக்கூடாது என இருந்தேன். இந்த ஆறு வருடம் நான் பாசிடிவ் பப்ளிசிட்டியில் இருந்தேன். அதை உடைக்க வேண்டும் என்றே சிலர் என்னுடைய பெயரை முழுதாக டேமேஜ் செய்திருக்கிறார்கள். எல்லாத்துக்கும் அடி கொடுத்துட்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார்.