இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஒன்று திரண்டு டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் அன்றிரவு நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.
இதன்பின் தீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள படம் ‘சபாக்’கடந்த 10 ஆம் தேதி ரிலீஸானது. இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி என்பவரின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபிகா படுகோன் பாதிகப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டதை பலரும் பாராட்டினார்கள். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு எதிராக பேசும் சில வலதுசாரி அமைப்புகள், இது சபாக் படத்திற்கான விளம்பரம் என்று சொல்கின்றனர். மேலும் இவர்கள் சபாக் படத்தை புறக்கணிக்கப்போவதாக ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டது. படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றாலும் படங்கள் குறித்து பதிவிடப்படும் இணையதளமான ஐஎம்டிபியில் சபாக படத்திற்கு 10 புள்ளிக்கு 4.4 புள்ளிகள்தான் கிடைத்துள்ளது. தீபிகாவின் இந்த படத்தை புறக்கணிக்கப்பதாக இருந்தவர்கள் இவ்வாறு செய்து வருகின்றனர். இதனால் நல்ல படமாக இருந்தபோதிலும் கம்மியான புள்ளிகளை பெற்றுள்ளது தீபிகாவின் இந்த சபாக்.