'காலா' படத்தையடுத்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டார்ஜிலிங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
அங்கு தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பு நடக்கவிருப்பதால் அங்குள்ள அலீட்டா ஹோட்டல் & ரிசார்ட்டில் 10 நாட்களாக ரஜினி தங்கியிருக்கிறார். இதனையடுத்து ரஜினி மேல் கொண்ட அன்பின் காரணமாக அந்த ரிசார்ட்டில் ரஜினிகாந்த் தங்கிய பகுதிக்கு ஹோட்டல் உரிமையாளர் ‘ரஜினிகாந்த் வில்லா #3′ என பெயரிட்டுள்ளார். மேலும் அங்கு வழங்கப்பட்ட டீ ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததால் அதற்கும் 'தலைவா ஸ்பெஷல் டீ' ' என பெயரிட்டுள்ளார். ரஜினியைப் பார்க்க அங்கும் ரசிகர்கள் கூடுகின்றனர்.
ADVERTISEMENT
Show comments