ADVERTISEMENT
ADVERTISEMENT
விக்ரம் பிறந்தநாளின்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. அதன் அடிப்படையில் விக்ரமின் நடிப்பிற்கும், உழைப்பிற்கும் தீனி போடும் வகையில் பல வேடங்களை ஏற்று நடித்திருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக ரஷ்யாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதி ஷூட்டிங்குடன் நாடு திரும்பியது படக்குழு.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன்ஸ், இதுவரை 90 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது இன்னும் 25 சதவீதம் ஷூட்டிங் நடைபெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்த பிறகு மீதமுள்ள ஷூட்டிங்கை உடனடியாக எடுத்து இறுதிக்கட்ட பணிகளை முடித்து ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT