இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து ஜாமியா மில்லியா, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் ஒன்று திரண்டு டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜேஎன்யு வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நேற்று இரவு நேரில் பங்கேற்று ஆதரவு அளித்தார்.
தீபிகா படுகோன் தயாரித்து நடித்துள்ள படம் ‘சபாக்’. இந்த படம் வருகிற 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி என்பவரின் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தீபிகா படுகோன் பாதிகப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள். மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு எதிராக பேசும் சில வலதுசாரி அமைப்புகள், இது சபாக் படத்திற்கான விளம்பரம் என்று சொல்லி வருகின்றனர். மேலும் இவர்கள் சபாக் படத்தை புறக்கணிக்கப்போவதாக ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தீபிகா படுகோனுக்கு ஆதரவாகவும் ஹேஸ்டேகுகள் ட்ரெண்டாகி வருகிறது.
முன்பு தீபிகா நடிப்பில் வெளியான பத்மாவத் படத்திற்கும் இதேபோல ஒருசில அமைப்புகள் புறக்கணிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். ஆனால், அந்த படம் செம ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.