Skip to main content

போலீஸை பதைபதைக்க வைத்த மாணவர் காங்கிரஸ்! சென்னையில் பரபரப்பு!

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

மும்பை ஐ.ஐ.டி.யில் மர்ம மரணமடைந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கிக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று ஊர்வலம் நடத்தினர். இதில் பெருந்திரளான மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், பா.ஜ.க.வின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பினர் அம்மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கு அரங்க மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங்களையும் ஏ.பி.வி.பி. அமைப்பினர் சேதப்படுத்தினர். இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் உள்ளிட்ட பல மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

 

இந்தத் தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பாக இன்று (21.02.2023) மாலை 4.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர் காங்கிரஸினர் கையில் ஒரு மர்ம பொருளைக் கொண்டுவந்தனர். அதனைக் காவல்துறை கண்டறிந்து அவர்களிடமிருந்து அதனைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால், மாணவர் காங்கிரஸினர் அதனை விடாமல் பிடித்திருந்தனர். போலீஸாரும் மாணவர் காங்கிரஸினரும் மாறி மாறி அதனை இழுத்தபோது, அங்கு ஏதோ பெரிய பரபரப்பு ஏற்படப் போகிறது எனச் சுற்றிருந்தவர்கள் பதைபதைப்பில் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் ஏறத்தாழ 10 நிமிடங்களாக நடந்து கொண்டிருந்தது. 

 

ஒரு கட்டத்தில் அங்கு வந்த காவல்துறை உயரதிகாரி, “அதை விடுங்க. அவங்க என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்” என்று காவல்துறையினரை நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த பொருளை மாணவர் காங்கிரஸினர் வெளியில் எடுத்தபோது, ஒரு காக்கி நிற அரை டவுசர் இருந்தது. ஏதோ பெரிய மர்மம் என நினைத்திருந்த காவல்துறையினர் அதனைக் கண்டு அப்சட் ஆகி “என்ன இது” என்று கேட்க, மாணவர் காங்கிரஸினர், “மோடி டவுசர்.. மோடி டவுசர்..” என்று கோஷமிட்டனர். பிறகு அதனைத் தீயிட்டுக் கொளுத்த முயன்றபோது காவல்துறையினர் சுதாரித்து அவர்களைத் தடுத்து, அந்தத் துணியைக் கைப்பற்றினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்கிருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.