ADVERTISEMENT

நீண்ட இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தளத்தில் பாவனா - வைரலாகும் புகைப்படம்

05:59 PM Jun 24, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாவனா, மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவிற்கு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக தமிழில் 'வெயில்', 'தீபாவளி' உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த பாவனா, கடந்த 2017-ஆம் ஆண்டு சில மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டு தற்போது வரை விசாரணை நடந்து கொண்டுவருகிறது.

இதனிடையே பாவனா, 2018-ஆம் ஆண்டு கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு கன்னட படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த பாவனா, மற்ற மொழி படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'அசல்' படத்திலும், மலையாளத்தில் பிருத்விராஜின் ’ஆதம் ஜான்’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஐந்து வருடங்களுக்கு பிறகு 'என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு' என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் மைமூநாத் அஷ்ரப் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஷராபுதீன், அனார்க்கலி நாசர், அர்ஜுன் அசோகன், செபின் பென்சன் உட்பட பலர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக வந்த பாவனாவை, படக்குழு பூங்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT