ADVERTISEMENT

பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் பேபி சாரா!

12:16 PM Aug 03, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக எடுக்கிறார். இந்த படத்திற்காக கடந்த ஒரு வருடமாக முதற்கட்ட வேலைகள் செய்து வந்த மணிரத்னம், கடந்த ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து ஷுட்டிங்கை தொடங்கினார்.

ADVERTISEMENT

லைகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இந்த படத்தை, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முதற்கட்ட படபிடிப்பிற்ககாக ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தாய்லாந்து சென்று, அங்கு ஷுட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த கரோனா அச்சறுத்தலால் படத்தின் ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்தவுடன் மீண்டும் ஷுட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் அறிமுகமான பேபி சாரா நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT