ADVERTISEMENT

“அஜித்துக்கு நடிப்பதை விட பிரியாணி செய்யத்தான் ஆர்வம் அதிகம்”- அஜித், சூர்யாவை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்

12:50 PM Jun 07, 2019 | santhoshkumar

சின்னத்திரையில் மிகவும் பிரபல நடிகராக வலம் வந்தவர் ‘பப்லு’ பிரித்விராஜ். சமீபத்தில் தெலுகு யூ-ட்யூப் சானல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளவர் அதில் அஜித், சூர்யா, ராதிகா ஆகியோர் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு சமூக வலைதளத்தில் வந்துகொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அஜித் குறித்து பேசிய பிரித்விராஜ், “அவர் ரொம்ப இறங்கிவந்து வேலை பார்ப்பார், கூலானவர், ஸ்டைலானவரும் கூட. ஆனால், ஜீரோ டெடிக்கேசன் உடையவர். அவர் நடிக்க விரும்பவில்லை, அதை கண்டுகொள்ளவும் இல்லை. ஆனால், அவர் நல்ல அதிர்ஷ்ட்டசாலி. அவர் கையுக்கே சூப்பர் ஸ்டார் புகழ் வருகிறது. அவருக்கு நடிப்பதை விட பிரியாணி செய்யதான் அதிக ஆர்வம் இருக்கிறது” என்றார்.

சூர்யா குறித்து பேசியவர், “ சூர்யா நல்ல டெடிகேட்டிவ் பெர்சன். ஆனால், தன்னை சுற்றியே அனைத்தும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர் பயங்கரமான ஒரு நபர். அவருடைய காலம் முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கிறேன்”.

ராதிகா குறித்து பேசுகையில், “ அவருடன் நடிப்பது மிகவும் கொடூரமானது” என்று முடித்துவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT