ADVERTISEMENT
ADVERTISEMENT
கேரளாவில் சிலநாட்களுக்குமுன் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஒட்டுமொத்த கேராளாவும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் தகவலை அறிவித்த அவர், கேரளாவில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்காகவே இந்த நிதியை அளித்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
Show comments