ADVERTISEMENT

நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

12:31 PM Sep 26, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார்.


கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி . சரண் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் எஸ்.பி.பியின் தாமரைப்பக்கம் தோட்டத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். நேரில் கலந்துகொள்ள முடியாத பிரபலங்கள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT