ADVERTISEMENT

”மரியாதைக்காக செய்தால்கூட அதை அஜித் விரும்பமாட்டார்” - அஜித் குறித்து நெகிழ்ந்த வெள்ளப்பாண்டி

12:13 PM Mar 22, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருமகன், சிவப்பதிகாரம், கருப்பசாமி குத்தகைக்காரர், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமான வெள்ளப்பாண்டி, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அந்த சீரியலுக்கான ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த அவரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பகிர்ந்து கொண்ட வெள்ளப்பாண்டி, அஜித்துடனான விஸ்வாசம் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

”விஸ்வாசம் படத்தில் அஜித் சாருக்கு அப்பாவாக நடித்திருந்தேன். என் வாழ்க்கையில் சொந்த அப்பாவிடம்கூட நான் அவ்வளவு நெருக்கமாகப் பழகியதில்லை. ரொம்ப எளிமையான மனிதர். மிகவும் பாசக்கார பையன். தலைக்கணம் இல்லாத ஈவிரக்கம் கொண்ட மனிதர். அவங்க ஷாட் முடிந்த உடனே எல்லோரும் கேரவனுக்குள் சென்றுவிடுவார்கள். ஆனால், அஜித் நம் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பார். அவர் பக்கத்தில் வரும்பொழுது மரியாதைக்காக எழுந்து நின்றால்கூட, நீங்கள் அப்பா, நான் பையன், நீங்கள் போய் எழுந்து நிற்கலாமா என்பார்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் அவர் கையாலே அனைவருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுப்பார். நிறைய பேருடன் சேர்ந்து நடித்திருந்தாலும் அஜித்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது”. இவ்வாறு வெள்ளப்பாண்டி தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT